முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 624

இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது

Updated On : 8 ஆகஸ்ட், 2017 at 11:40 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:07 PM

‘சிவகதியைப் பெறவேண்டும்’ என்று கோருகிற இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் நான்காவது எழுத்தாக வரும் கணக்கில் சேராத வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கு எழுத்துகளும் அமைந்துள்ளன. 

தனதத்தன தானதன தனதத்தன தானதன
      தனதத்தன தானதன தனதானா

Advertisement

சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
         சுகவிப்பிர தேசரச சுபமாயா

துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
         தொகைவக்ரம மாதர்வயி றிடையூறு

கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
         களையெத்திடி ராகவகை யதின்மீறிக்

கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
         கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ

குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
         பிடிகைத்தல ஆதியரி மருகோனே

குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
         குணமுட்டர வாவசுரர் குலகாலா

திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
         யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா

திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
         ளிதயத்திட மேமருவு பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.