முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 726

திருவடியைத் தொழவேண்டும்

Updated On : 31 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:59 PM

திருவடியைத் தொழவேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.


தனத்தன தானந் தனத்தன தானந்
      தனத்தன தானந் தனதான

Advertisement

எனக்கென யாவும் படைத்திட நாளும்
         இளைப்பொடு காலந் தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
         இலச்சையி லாதென் பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
         உரைத்திடு வார்தங் குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
         பொலச்சர ணானுந் தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
         விழக்கொடு வேள்கொன் றவனீயே

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
         விருப்புற வேதம் புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
         சிரத்தினை மாறும் முருகோனே

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
         திருத்தணி மேவும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.