முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 614

என்னை ஆண்டருள்

Updated On : 24 ஜூலை, 2017 at 9:20 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:00 PM


‘என்னை ஆண்டருள்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருச்செந்திலுக்கானது. 

ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு நெடில் என்று இரண்டு இரண்டு எழுத்துகளால் அமைந்துள்ள ஆறு சீர்களையும் ஒரு தொங்கல் சீரையும் கொண்ட பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டிருக்கிறது.  திரும்பத் திரும்பச் சுழன்று பயிலும் மெல்லொற்று இனிமையான சந்தத்தைத் தருகிறது.


தந்தா னந்தா தந்தா னந்தா
                தந்தா னந்தா தனதான

Advertisement

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
               மென்பா கஞ்சொற் குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்
               மென்றோ ளொன்றப் பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
               வன்பே துன்பப் படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
                வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
                குன்றாள் கொங்கைக் கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
                ரும்போய் மங்கப் பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
                கன்றே வும்பர்க் கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
                கந்தார் செந்திற் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.