முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 616

நற்கதியைக் கோரும்

Updated On : 29 ஜூலை, 2017 at 11:36 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

நற்கதியைக் கோரும் இப்பாடல் பழனிக்கானது. அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு அடி, மடக்கடியிலும் பயிலும் மூன்று சீர்களிலும் சமமாக ஐந்து ஐந்து எழுத்துகள் அமைந்துள்ளன.  இந்த ஐந்தெழுத்துகளும் குறிலெழுத்துகள்; ஒவ்வொரு சீரும் ஒரு வல்லொற்றோடு முடிவடைகிறது. 

தனதனதத் தனதனதத்
                             தனதனதத் தனதான

திடமிலிசற் குணமிலிநற்
                            றிறமிலியற் புதமான

Advertisement

செயலிலிமெய்த் தவமிலிநற்
                            செபமிலிசொர்க் கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற்
                            கியல்பிலிநற் றழிழ்பாட

இருபதமுற் றிருவினையற்
                            றியல்கதியைப் பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக்
                           கிளைமடியப் பொரும்வேலா

கிரணகுறைப் பிறையறுகக் 
                           கிதழ்மலர்கொக் கிறகோடே                       

படர்சடையிற் புனைநடனப்
                           பரமர்தமக் கொருபாலா

பலவயலிற் றரளநிறைப் 
                           பழநிமலைப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.