முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 618

ஆசை அறவேண்டும்

Updated On : 31 ஜூலை, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM

ஆசை அறவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கானது.  மூன்றாவது அடியில் ‘இராவண’ என்று மூன்று முறை பயின்றாலும், ஒவ்வொரு முறையும் பொருள் மாறும்படி அமைந்திருக்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான அனைத்துச் சீர்களிலும் ஒரேவிதமான அமைப்பைக் கொண்ட ‘குறில்-நெடில்-குறில்-குறில்’ என்ற நான்கெழுத்துகளைக் கொண்டவை.  ஆறாவது சீரில் மட்டும் கணக்கில் சூராத வல்லொற்று ஒன்று கூடுதலாகப் பயில்கின்றது.

தனாதன தனாதன தனாதன தனாதன
      தனாதன தனாதனத் தனதான

Advertisement

நிராமய புராதன பராபர வராம்ருத
      நிராகுல சிராதிகப் ப்ரபையாகி

நிராசசி வராஜத வராகர்கள் பராவிய
       நிராயுத புராரியச் சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
       சொரூபமி வராதியைக் குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
       துரோகரை தராசையுற் றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
      இராவண இராஜனுட் குடன்மாய்வென்

றிராகன் மலாரணிஜ புராணர்கு மராகலை
      யிராஜசொ லவாரணர்க் கிளையோனே 

விராகவ சுராதிப பொராதுத விராதடு
      விராயண பராயணச் செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.