பகுதி - 498
இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது
இறைவனுடைய திருவடியைப் பெறக்கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது. வல்லொற்றும் மெல்லொற்றும் மாறிமாறி வரும் குற்றெழுத்துகளால் அமைந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்; இதில் ஒவ்வொரு சீரிலும் ஒற்றொழித்து நான்கு நான்கு எழுத்துகளும்; கணக்கில் வராதவையான வல்லொற்று மூன்றாமெழுத்தாகவும், மெல்லொற்று 5, 7ம் எழுத்துகளாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் - தனதானா
Advertisement
குழைக்குஞ்சந் தனச்செங்குங்
குமத்தின்சந் தநற்குன்றங்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் - கியலாலே
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் - கியராலே
உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங் - குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் - சடிசேராய்
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
சடைக்கண்டங் கியைத்தங்குந்
தரத்தஞ்செம் புயத்தொன்றும் - பெருமானார்
தனிப்பங்கின் புறத்தின்செம்
பரத்தின்பங் கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங் கரிக்கென்றும் - பெருவாழ்வே
கழைக்குங்குஞ் சுரக்கொம்புங்
கலைக்கொம்புங் கதித்தென்றுங்
கயற்கண்பண் பளிக்குந்திண் - புயவேளே
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
திலிற்கொண்டன் பினிற்றங்கும் - பெருமாளே.