இந்த நாளில் அன்று(11.06.2000)இழந்த பெருமையை மீட்பேன் - கோஷ்டிகளுக்கு இனி இடமில்லை: தமிழக புதிய காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சபதம்
தமிழகத்தில் காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டுவேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டுவேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பின் தில்லியில் இருந்து முதன்முதலாக தமிழகம் வந்த அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது -
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1967-க்கு முன்பு எப்படி செல்வாக்கோடு, பெருமையோடு, மதிப்போடு இருந்ததோ அதை மீண்டும் பெற்றாக வேண்டும். சோனியா காந்தி மீண்டும் பிரதராக வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தொண்டர்கள் ஓய்வு, உறக்கமின்றி பாடுபட வேண்டும். தமிழக காங்கிரஸில் இனி கோஷ்டிகளுக்கு இடமில்லை. இனி ஒரே கோஷ்டிதான். அது காங்கிரஸ் கோஷ்டிதான்.
Advertisement
கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் தாற்காலிக அலுவலகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட இளங்கோவன், வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதுதான் எனது முதல் பணி. அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பதை சோனியாதான் முடிவு செய்வார் என்று சொன்னார்.