இந்த நாளில் அன்று(15.06.1955)உயிரை வாங்கிய வேஷம் - ஃபோட்டோவுக்காக பாம்பு அணிந்தவரின் பரிதாப முடிவு
கழுத்தில் பாம்பை மாலையாகப் போட்டுக்கொண்டு போட்டோ படம் எடுத்துக்கொள்ள விரும்பிய ஒருவர் பாம்புக் கடியினால் மாண்டார்.
கழுத்தில் பாம்பை மாலையாகப் போட்டுக்கொண்டு போட்டோ படம் எடுத்துக்கொள்ள விரும்பிய ஒருவர் பாம்புக் கடியினால் மாண்டார்.
கர்நாடக மாநிலம் தார்வாரில் உள்ள சாயிபாபா மடத்தைச் சேர்ந்த நிங்கப்ப பூஜாரி என்பவர், பாம்பாட்டி ஒருவனிடம் இருந்து இரு பாம்புகளை வாடகைக்கு வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டார்.
போட்டோ பிடிக்கும் சமயத்தில் பாம்பு படம் எடுக்கும்படி செய்வதற்காக அதைத் துன்புறுத்தியதாகவும், விஷப் பல் எடுக்கப்படாமல் இருந்த பாம்பு அவரைக் கடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது,
Advertisement
அவர் உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டும் பிழைக்கவில்லை.