முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(23.06.1964)ரூ.2000 செக் மோசடி - ஜவுளிக் கடையில் பேரம் நடத்தியவரை போலீஸ் தேடுகிறது

கோவையில் ஒரு கம்பெனிக்கு சொந்தமான செக்கில் பொய் கையெழுத்து போட்டு, பாங்கியில் இருந்து ரூ.2000 வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸ் வலை போட்டு தேடி வருகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

கோவையில் ஒரு கம்பெனிக்கு சொந்தமான செக்கில் பொய் கையெழுத்து போட்டு, பாங்கியில் இருந்து ரூ.2000 வாங்கிக்கொண்டு கம்பி நீட்டியதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸ் வலை போட்டு தேடி வருகிறது.

அந்தக் கம்பெனி மேட்டுப்பாளையம் ரோடில் இருக்கிறது. செக்கில் பொய் கையெழுத்து போட்டு தனது பாங்கு கணக்கில் இருந்து யாரோ ஒருவர் ரூ.2000 வரை எடுத்துள்ளதாக அக்கம்பெனி போலீஸில் புகார் செய்துள்ளது.

இது சம்பந்தமாக போலீஸார் விசாரித்ததில் இருந்து தெரிய வந்துள்ளதாவது -

Advertisement

கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஜவுளி கடைக்குச் சென்று ஒரு நபர் ரூ.500 பெறுமான ஜவுளி வாங்கிக் கொண்டு அத்தொகைக்காக ரூ.2000-க்கு ஒரு செக்கை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்தாராம். அக்கடைக்காரர் உடனே அந்த செக்கை தமது ஆள் ஒருவரிடம் கொடுத்து பாங்குக்குச் சென்று மாற்றிவரச் சொன்னார். அந்த ஆள் சென்று செக்கை பாங்கில் கொடுத்து பணமாக மாற்றி வந்தார். கடைக்காரர் தமக்குச் சேர வேண்டிய ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பாக்கியை அந்த நபரிடம் கொடுத்தார்.

அந்த செக் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கம்பெனிக்குச் சொந்தமானது என்றும், அந்த நபர் அந்த செக்கில் பொய்க் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அப்துல் ஹமீது என்று அந்த நபர் தம்மை சொல்லிக்கொண்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments