இந்த நாளில் அன்று(02.05.1960)சர்க்கார் கட்டுப்பாடு, கல்வி ஸ்தாபனங்களை நசுக்கியே தீரும் - மத்திய அமைச்சர் மொரார்ஜி எச்சரிக்கை
கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்துவது குறித்து இந்திய சர்க்கார் நிதி மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் எச்சரித்தார்.
கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்துவது குறித்து இந்திய சர்க்கார் நிதி மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் எச்சரித்தார்.
கல்வி ஸ்தாபனங்களுக்கு நிதி உதவி அளிக்க சர்க்கார் கடமைப்பட்டுள்ளபோதிலும், அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த அது முற்படக்கூடாது என்றார். கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்தினால் அவை நசுங்குண்டுபோகும் என்று கூறினார்.
அகமதாபாத்தில் ஒரு கல்லூரியில் அவர் பேசும்போது, சமூக அமைப்பை உருவாக்குவதில் கல்வி ஸ்தாபனங்களுக்கு உரிய பங்கை அவர் நினைவூட்டினார். மகிழ்ச்சி ததும்பும் சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமானால் மக்களிடையில் அஞ்சானெஞ்சத்தையும், சத்திய ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் என்றும், கல்வி ஸ்தாபனங்களே இப்பணிக்கு ஏற்ற சாதனம் என்றும் அவர் கூறினார்.
Advertisement