கவிதைமணி

சுனாமி சுவடுகள்:  ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

சுனாமி சுவடுகள் பிணாமி
நாமத்தினாலும் உலாவரும்
எச்சரிக்கை கிடைத்தாலும் 
துச்சமென கொள்வதாலோ

அனாயசமாக சூரையாடி
உயிரையும் உடமையையும்
குழிதோண்டி புதைத்திட
வழி வகுத்து விடுகின்றது

ஞாலமே கண்கலங்கிடவே
வேண்டாத வேண்டுதலா
கனாக் கலைந்தது போல்
வனாந்திரமாக்கி செல்லும்

நம்தலை விதி என்னவோ
சேர்த்ததை இழக்கவும்
இழந்ததை சேர்க்கவும்
வாடிக்கை யாகிவிட்டது

முப்பக்கமும் கடல்மயம்
எப்பக்கத்திலும் ஆபத்தே
தீவினைப் போன்றன்றோ
வாழ்கின்ற வாழ்க்கையும்

மழை வருகிறதெனவே நாம்
குடையை  விரிக்கின்றோம்
நனையாதிருக்க மட்டுமே
மழை நிற்பதற்கு அல்லவே

இயற்கையின் சீரல்கள் 
காலநிலையை பொருத்தது
விரட்டிட முடியாது நாம் விலகிச்செல்வது நலமே

சுனாமி சுவடுகள்நினைவை விட்டு அழிவதில்லை
நம்  அழிவை நினைவு கொள்ள  வைத்தே மகிழும் சுனாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT