கவிதைமணி

சுனாமிச் சுவடுகள்: பொன். குமார்

கவிதைமணி

மனிதர்களை
இன்னும் பயமுறுத்திக்
கொண்டே இருக்கின்றன
சுனாமிச் சுவடுகள்.

பத்து ஆண்டுகளாகியும்
சுனாமி தினத்தன்று
நெஞ்சுக்குள்
நடுக்கமே ஏற்படுகிறது.

ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும்
மக்களிடம் 
அச்சத்தை உண்டாக்கவே செய்யும்
சுனாமிச் சுவடுகள்.

இறந்த உயிர்களையும்
இழந்த உடைமைகளையும்
எண்ணி ஏங்கவே செய்கின்றன
சுனாமிச் சுவடுகள்.

இயற்கையை மனிதர்கள்
எப்போதும் மிஞ்சவே முடியாது
என்பதை 
அறிவித்துக் கொண்டே இருக்கின்றன
சுனாமிச் சுவடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT