சங்கிலியாய் மனித உறவுகள்
பங்கமாய் அதன் இழப்புகள்
அன்பு உறவுகள் அதிகமானால்
இன்பமாய் பாச வலைகள்
அன்பு வலைகள் அறுந்தால்
ஆயிரமாயிரம் துன்ப சுமைகள்
இறந்தவரும் வலியை சொல்ல மறந்து விட்டார்
இழந்தவரை எண்ணி நாளும் மாளுகின்றோம்
இழப்புகள் தரும் மன வலி – அது
நெஞ்சில் ஆறா ரண வலி
நிஜமாய் இருந்து வந்தவர்கள்
நினைவாய் போவது பெருவலி
நித்தம் அவர்தம் நினைப்பு
நீங்கா என்றும் பெரும் வலி
இழப்பு தரும் வலியை மறக்க
மாத்திரை ஏதும் இல்லையே
அடித்த வலி மறைந்தவிடும்
இழப்பு வலி நெஞ்சை கொல்லும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.