முகப்பு
கவிதைமணி

பட்டதாரி: லூர்து எஸ் ராஜ்

Updated On : 7 நவம்பர், 2016 at 3:14 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
தந்தை பட்டாதாரி தலைமகன் நான் இன்று பட்டதாரிவிந்தையிது நிகழ்ந்த போதும் வேலையேதும் கிட்டவில்லை.பட்டாதாரி உழைப்பதனால் பலர்நாங்கள் உண்கின்றோம்‘பட்டதாரி என்னால் தான் பலமடங்கு செலவினமாம்’பகலெல்லாம் உழைக்கின்ற பட்டாதாரி யுடன்சேர்ந்துபழஞ்சேற்றில் கால்வைக்க படிப்பு தடுக்கிறது, கால்குழாயை சுருட்டி மடக்க கூனிக் குறுகுகிறேன்; நல்உழைப்பைப் பள்ளிக்கூடம்  சொல்லித் தரவில்லை.கல்லூரி தந்ததுவே கல்விஎன எண்ணி நானும்சொல்லாமல் கொள்ளாமல் சோம்பேறி ஆகிவிட்டேன்.அம்மாவின் பொறுமையும்  அப்பாவின் அனுபவமும்சும்மா வந்ததனால் சுயபடிப்பு ஆகாதோ?தந்தை யிடமிருந்து சரிபாதி நிலம்பெற்ற இன்றேபட்டதாரி நானுமொரு பட்டாதாரி ஆகிவிட்டேன்வெட்டி முறித்து வேலியை சீராக்கி விவசாயவேலையில் ஈடுபட விருப்பமுடன் முன்வந்தேன் .வேலையில்லா பட்டதாரிஎன வேறொருவர் சொல்லவேண்டாமே ; நிலத்தில் வேலையும் இருக்கின்றதுவேண்டிய விளைச்சல் வருகின்றது ; இன்றுநான்பட்டதாரி பட்டாதாரி ; பட்டாதாரி பட்டதாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.