வழிதவறிய பயணங்கள்: ஆர்.அருண்குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
வாழ்க்கைப் பாதைக்கு தேவை வழி
வார்த்தை தவறினால் மாறிடும் விதி.
தாழ்வில்லா மனதுக்கு அமைதி தேடு
தவிப்பை போக்கிட இதுதான் நியதி.
தனிமையே நம்மை மாற்றிடும்
தலைவிதி என்பது வீணே.
பதறினால் விழுவது மனம்தான்
பக்குவம் தேவை வாழ்விலே.
பயணித்தால் ஆயிரம் அனுபவம்
பார்த்துதான் பழக வேண்டும்.
துயரமின்றி வசந்தம் வீசிட
தொல்லை அறவே தவிர்த்திடு.
அனுபவங்களை அசைபோட்டு
அன்பான வாழ்வுக்கு விதைபோடு.
மாறினால் உள்ளம் நொந்திடும்
மௌனம்தான் உமக்கு நிரந்தரம்.
வழிதவறி பயணித்தால் ல்ட்சிய
வாழ்வே திசைமாறிடும்.
மொழி தெரியா ஊமையாய்
முற்றும் திரிவது தேவையா?