முகப்பு
கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: கா.ந.கல்யாணசுந்தரம்  

Updated On : 14 நவம்பர், 2016 at 4:42 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM

தாய்மொழி அறிய  பாடம் கற்றல் 
தெளிவாகும் அறிவார்ந்த சிந்தனை 
பிறமொழிக் கல்வி பயிலின் மழுங்குமே   
திறன்மிகு புத்திக் கூர்மை !

தாய்மொழிப் பகன்று வாழ்தல் 
தகைசான்ற வாழ்வின் விளக்கம் !
அயல் மொழிப் பேசி நித்தம் 
அன்னைமொழி மறக்கலாமா ?

பொதியென புத்தகங்கள் பள்ளிக்கு 
விதியென்று பிள்ளைகள் சுமக்கலாமோ ?
விளையாட்டாய்க் கல்விதனை நாளும் 
விளம்பிடில் வாழ்வு சுவைக்குமன்றோ !

Advertisement

தனித்திறன் பகுத்தறிந்துப் பாங்காய் 
இனித்திடும் கல்விதனைக் காலத்தே 
விதைத்திட மறக்கலாயின் தலமறியா 
யாத்திரையாய் வழிதவறிய பயணமாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.