வழி தவறிய பயணங்கள்: கா.ந.கல்யாணசுந்தரம்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
தாய்மொழி அறிய பாடம் கற்றல்
தெளிவாகும் அறிவார்ந்த சிந்தனை
பிறமொழிக் கல்வி பயிலின் மழுங்குமே
திறன்மிகு புத்திக் கூர்மை !
தாய்மொழிப் பகன்று வாழ்தல்
தகைசான்ற வாழ்வின் விளக்கம் !
அயல் மொழிப் பேசி நித்தம்
அன்னைமொழி மறக்கலாமா ?
பொதியென புத்தகங்கள் பள்ளிக்கு
விதியென்று பிள்ளைகள் சுமக்கலாமோ ?
விளையாட்டாய்க் கல்விதனை நாளும்
விளம்பிடில் வாழ்வு சுவைக்குமன்றோ !
Advertisement
தனித்திறன் பகுத்தறிந்துப் பாங்காய்
இனித்திடும் கல்விதனைக் காலத்தே
விதைத்திட மறக்கலாயின் தலமறியா
யாத்திரையாய் வழிதவறிய பயணமாகும் !