முகப்பு
கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: சசி எழில்மணி

Updated On : 14 நவம்பர், 2016 at 4:06 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
வழிகாட்டி இல்லாமல்விழிகள் பிதுங்கியதுபயணங்கள் தொடர்ந்ததுபாதைகள் மாறியதுதிரும்பிச் செல்லவேமனம் சொல்லுதுகடந்து வந்த பாதையும்ஏனோ மறந்ததுசெய்த தவறுகள் கண்ணில் தெரியுதுசேர்ந்திடும் இலக்கினைவெகு தூரத்தில் பார்க்கின்றேன்வந்தவழியை நினைத்தேவருத்தத்தில் தவிக்கின்றேன்செய்த தவறுகளைபட்டியல் போடுகிறேன்திட்டமிடலின் அவசியம்இப்போது உணர்கின்றேன்திக்குத் தெரியாத காட்டில்திசைகளும் அறியாதுதனித்து நிற்கின்றேன்நிலைமையை சரிசெய்யமுயற்சிகள் செய்கின்றேன்இதுவும் ஒரு காலமென்றுஎனக்கு நானேஆறுதல் சொல்கிறேன்வழி தவறிய பயணங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.