முகப்பு
கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: பூ. சுப்ரமணியன், ​

Updated On : 14 நவம்பர், 2016 at 4:23 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
மானிட இதயங்களே.....ஜாதிகள் மதங்கள்ஏழை பணக்காரன்என்னும்புயல் காற்று வீசும்இவ்வுலகத்தைசற்றே நோக்குங்கள் !புயல் காற்றை பொசுக்கிஅன்பு என்னும்தென்றலைக் காணநாம் அனைவரும்முயல வேண்டாமா ?விஷம்போல் ஏறும்விலைவாசி உண்டுதேர்தல் சீட்டுக்கும்விலையேற்றமுண்டுமலிவு விலையில்கிடைப்பது - இங்குமது மட்டுமே.சத்திய சோதனைதந்தவன் மறைந்ததால்  சத்தியமும் தருமமும்சவக்குழியில் புதைந்ததோ?என எண்ணி விடாமல்புனிதப் பயணத்தைநாம் தொடங்கினால்நம்பிக்கை நட்சத்திரம்நம்மிடையே பிரகாசிக்கும் !புத்தன் ஏசு காந்திபுனித ஆன்மீக அன்பர்கள்நடந்து சென்ற வழியில்நாம் கருத்துடன் நடந்தால்நம் பயணங்கள் எல்லாம்புனிதப் பயணமாகும் !புறந்தள்ளி நடந்தால்போகும் இடமெல்லாம்அமைதி காணாமல்வழி தவறிய பயணங்களாகிநம்மோடு தலைமுறையும்படுகுழியில் வீழ்ந்து விடும் !நல் இதயங்களே ...நம்பிக்கை என்னும்பயணத்தைநாளும் தொடர்ந்தால்விண்ணையும் அடைந்துவெற்றி கொள்வீர்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.