வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால் அது செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை ஒரு செல்லாத காசு என்று ...! பகிர்ந்து உண்ணும் பண்பும் நலிந்தோரிடம் அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம் கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும் இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும் தரை தட்ட வைக்கும் அவன் வாழ்க்கை பயணக் கப்பலை !வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு ...ஒரு வழி தவறினாலும் நெறி பிறழாமல் ஒருவன் தொடரும் பயணம் சேர்க்கும் செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.