கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: பொன் . குமார்

கவிதைமணி

வாழ்க்கைப் பயணத்தில்
வழி தவறி போனவர்கள்
வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது.

வழி தவறியதால்
வாழ்க்கையை இழந்து
வருத்தப் பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாதை மாறும் பயணங்கள்
எட்ட முடியாது இலக்கு.
பாதை மாறிய மனங்கள்
திரும்புவது என்பது விலக்கு.

பாதை மாறும் வாகனம்
விபத்து ஏற்படுவது நிச்சயம்.
வழி தவறிய மனிதர்களும்
தோல்வி அடைவது சத்தியம்.

பாதைகள் மாறினாலும்
பயணம் மாறக் கூடாது.
பயணமே மாறினாலும்
பாதை மாறக் கூடாது.

வாழ்க்கைப் பயணத்தில்
வருவோர் போவோர் உண்டு.
வழி தவறிய கணத்தில்
வருத்தப் படுவோர் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT