கவிதைமணி

வழிதவறிய பயணங்கள்: -கோ. மன்றவாணன்

கவிதைமணி
சிறையில் கழிகிறதுவழிதவறிய இளைஞர் பயணம்அவமானத்தில் முடிகிறதுவழிதவறிய பெண்ணின் பயணம்வாரிசுப்போரில் மடிகிறதுவழிதவறிய கட்சியின் பயணம்நடிகையின் மடியில் விழுகிறதுவழிதவறிய துறவியின் பயணம் பாவத்தைச் செய்து செய்துகடவுளுக்குக் காணிக்கை செலுத்துகிறதுவழிதவறிய ஆன்மீகத்தின் பயணம்நேர்மை விளக்குகளை உடைத்தெறிந்துஇருட்டில் முன்னேறுகிறதுவழிதவறிய ஆட்சியின் பயணம்வயல்கள் காயகடலில் கொட்டித் தீர்க்கிறதுவழிதவறிய மேகப் பயணம்ரத்தத்தைஅள்ளிப் பூசிக்கொண்டு வெறிக்குலவை இடுகிறதுவழிதவறிய மதங்களின் பயணம்வழிதவறிய யானையொன்றுமரக்கூண்டில் அடைக்கப்பட்டதுபோல்ஆனதுமக்களின் வாழ்க்கைப் பயணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT