பௌணர்மி நிலவே வானில் தவழ்ந்து வருகின்றாய்
எங்கள் காதலுக்கு முகவரி தந்து காட்சியளிக்கின்றாய்
நான் உன்னைப் பார்க்கும்போது அவள் என்னை பார்க்கின்றாள்
அவள் என்னை பார்க்கும்போது கருமேகத்திர்க்குள் மறைகின்றாயே !
வீட்டின் ஜன்னல் வழியே குளிர்ந்த தென்றல் வீசிடும்
சூரியனும், நிலவும் பகலிரவிலே என்றும் தோன்றிடும்
சூரியோதயம் புத்துணர்ச்சியும்,நிலவானது குளிர்ச்சியும் தரும் ,
காதலர்களுக்கு நிலவின் வெளிச்சமே என்றும் மகிழ்ச்சித்தரும் !
எங்கள் காதலோ இருவீட்டு ஜன்னல் ஓரத்தில் உண்டானது
நாங்கள் கொஞ்சுமொழி பேச கடற்கரையே தனியிடமானது
விழியே காதல் கதை பேசி, எங்கள் மனம் அலைபாய்க்கின்றதே
இரு விழிகளின் நேசமே , எங்கள் காதல் தேசமானதே !
அத்திக்காய் சென்று என் காதலியை என்றும் காயாதே
என்னை எது வேண்டுமாயின் செய் என்கின்றேன்
அப்பாவைக்காய், மாதுளங்காய் என்றும் நீ காயாதே
எங்கள் காதல் உறவினை என்றும் பிரிவினைப்படுத்தாதே !
நிலவின் ஒளியை கருமேகங்கள் கட்டியணைத்து முத்தம்மிடும்,
காதலர்களுக்கோ இருட்டும், இரவும் இன்பத்தை ஊட்டிவிடும்
நிலவே நீ நினைக்கும் இடத்தில் நாங்கள் இருவரும்மில்லை
எங்களை நெருங்காதே எனக் கூற எந்த பயமும்மில்லை !