கவிதைமணி

எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி

வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை ! 
வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! 

துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை ! 
துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை ! 

கடலிலிருந்துப் பயணித்து மேகமாகும்  மழை! 
கனிந்து மண்ணிற்கு வந்து விழும் மழை ! 

வருடம்   தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை ! 
வளங்கள் பெரும் வளர்ச்சிப் பெருக்கும்  மழை ! 

மயில்கள் தொகை விரித்து ஆடினால் மழை ! 
மண் செழிக்கும் மகசூல் பெருக்கும் மழை ! 

வருமுன்னே ஆராய்ந்து சொல்கின்றனர் மழை ! 
வஞ்சியர்கள் விரும்பி மகிழ்ந்திடும் மழை ! 

அளவோடு  பெய்தால் நலமாக  வாழவைக்கும் மழை ! 
அளவின்றிப் பெய்தால் இன்னல் தரும் மழை ! 

புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் மழை !  
புவியின் விளைச்சலை வளர்த்திடும் மழை ! 

காதலர்களின்  ஊடல் தீர்த்து வைக்கும் மழை ! 
காதலர்களின் கூடல் இணைத்து வைக்கும் மழை ! 

ஓரமாக ஒதுங்கி நின்ற எனை நனைத்தது மழை ! 
உடன் இறங்கி மழையில் நனைந்து மகிழ்ந்தேன் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் பிற மாநில நீதிபதிகள் - உச்சநீதிமன்றம் அனுமதி

ரயில்வே நிா்வாகம் அலட்சியம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT