நிழலில் தேடிய நிஜம்: கவி.சுசிமணாளன்
நிழலில் தேடிய நிஜம் இவர் மாய
உலகில் மூழ்குவர் நித்தம்...!
நித்தம் நித்தம் சித்தமெல்லாம்- நடிகனின்
நினைப்போடிருப்பர் -சொந்த
நிலை காணாது கனவில் திளைப்பார்
தாய் தந்தை நலன் மறப்பர் காண்!
பக்கமிருக்கும் நண்பன் நேசம் மறப்பர் -ஆங்கே
பகலிரவு பாராது முகநூலில் நட்பு வளர்ப்பர்
மிச்சமிருக்கும் நாணம் கூட விற்பார் -அவர்
எச்சங்களை கடைப் பரப்பி விற்பார்!
Advertisement
முகம் புதைத்த முகநூல் கிரீச்சு -கெட்ட
அகம் தைத்த நட்பே கூடாது கேள்
நித்தம் ஒரு புத்தகம் படி நாளும்
சித்தம் தெளிவுற நூலைப் படி!
நிழலில் தேடிய நிஜம் நீ ஒருநாள்
வெயிலில் காயும்போது உணர்வாய்
நிதர்சனம் இதுவே கேளாய் நட்பே!