வாழ்க்கையெனும் போர்க்களம்: கே.நடராஜன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில் ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும் தருணம் விளையாட்டு தளம் ஒன்று உருவாகுது அதே வீட்டில் ! விளையாட்டு போல நாட்கள் கடந்து அந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மீண்டும் அதே அமர்க்களம் அந்த வீட்டில் ! அமர்க்களமாக ஆரம்பிக்கும் ஒரு "குழந்தையின்" வாழ்க்கை என்றுமே ஒரு விளையாட்டுதான் ...விதி என்று ஒன்று நடுவில் விளையாடாமல் இருந்தால் !விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும் வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு ஒரு படி கல்லே என்ற உண்மையும் தன்னால் புரியும் எந்த "குழந்தைக்கும்" !வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று புரிந்தால் போர்க்களம் ஆகாது வாழ்க்கை என்றும் !