வாழ்க்கையெனும் போர்க்களத்தில்: சசி எழில்மணி
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
சுழலும் புவிபோல
சுழலும் எண்ணங்கள்
உறக்கம் தொலைக்க
புலரும் காலை
அச்சம் கொடுக்க
பிறக்கும் துணிவு
துணை தேட
தனித்து கிடப்பதாய்
மனமும் சொல்ல
ஓய்வறியா நேரங்களிலும்
கைகூடா காலங்களிலும்
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்
புதியதோர் உலகமதில்
வாழும் நாட்கள்
சுகமாய் அமையுமோ
Advertisement