வெல்லும் சொல்: பொன். குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM
சொல்லில் உயர்வு
செந்தமிழ் சொல்..
இனிய தமிழுக்கு
ஈடிணை இல்லை.
சொல்லும் சொல்
சொக்க வைக்கும்..
கல்லான மனதையும்
கலங்கச் செய்யும்.
சொல் தன்னில்
சுவை இருக்கும்.
சொல்லாத சொல்லும்
செய்தியைச் சொல்லும்.
Advertisement
சொற்கள் சேர்ந்து
சிந்தனையை வளர்க்கும்.
சொற்கள் கூட்டணி
சுகத்தையே பெருக்கும்.
வண்டமிழ் சொல்
வெல்லும் சொல்லாகும்.
தரத்திலே உயர்ந்தது
தமிழ்ச் சொல்லாகும்.