முகப்பு
கவிதைமணி

வெல்லும் சொல்: பொன். குமார்

Updated On : 10 ஜூன், 2018 at 4:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM

சொல்லில் உயர்வு 
செந்தமிழ் சொல்.. 
இனிய தமிழுக்கு
ஈடிணை இல்லை. 

சொல்லும் சொல்
சொக்க வைக்கும்..
கல்லான மனதையும்
கலங்கச் செய்யும்.

சொல் தன்னில்
சுவை இருக்கும். 
சொல்லாத சொல்லும்
 செய்தியைச் சொல்லும். 

Advertisement

சொற்கள் சேர்ந்து
சிந்தனையை வளர்க்கும். 
சொற்கள் கூட்டணி
சுகத்தையே பெருக்கும். 

வண்டமிழ் சொல்
வெல்லும் சொல்லாகும். 
தரத்திலே உயர்ந்தது
தமிழ்ச் சொல்லாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.