நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 77

சத்தமிடும் கடலிலே, கிடந்த

செ.குளோரியான்


உரைக்கில் ஓர் சுற்றத்தார், உற்றார்என்று ஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய், உரைப்புஎல்லாம்
நின்அன்றி மற்றுஇலேன் கண்டாய், எனது உயிர்க்குஓர்
சொல்நன்றி ஆகும் துணை.

சத்தமிடும் கடலிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்யும் எங்கள் தந்தையே,

சிந்தித்துப் பார்த்தால், நீ மட்டும்தானே எங்களுக்கு உறவு? நாங்கள் சுற்றம் என்றும் உறவு என்றும் சொல்லிக்கொள்ள வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?

எங்களுடைய ஆத்மாவுக்கு ஒரே சொல்லால் உதவிசெய்கிற துணை நீ, மற்ற அனைத்துவகைத் துணையும் நீ, உன்னையன்றி வேறு யாரையும் நாங்கள் துணையாக எண்ணுவதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT