நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 79

பரமபதத்துக்கு இணையான சிறப்பல்லவா!

செ.குளோரியான்


உள்நாட்டுத் தேசுஅன்றே! ஊழ்வினையை அஞ்சுமே,
விண்நாட்டை ஒன்றாக மெச்சுமே, மண்நாட்டில்
ஆர்ஆகி எவ்இழிவுஇற்றுஆனாலும், ஆழிஅம்கைப்
பேராயர்க்குஆளாம் பிறப்பு.

இந்த மண்ணுலகத்திலே யாராகப் பிறந்து எத்தகைய இழிவான தொழில்களைச் செய்தாலும் சரி, அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டிருக்கும் பேராயனான எம்பெருமானுக்கு அடிமையாகப் பிறந்திருக்கும் இந்தப் பிறப்பு, பரமபதத்துக்கு இணையான சிறப்பல்லவா! அப்படிப் பிறந்தவர்கள் ஊழ்வினையை எண்ணி அஞ்சுவார்களா? சுவர்க்கத்தை ஒரு பொருட்டாக எண்ணுவார்களா? (மாட்டார்கள்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT