உள்நாட்டுத் தேசுஅன்றே! ஊழ்வினையை அஞ்சுமே,
விண்நாட்டை ஒன்றாக மெச்சுமே, மண்நாட்டில்
ஆர்ஆகி எவ்இழிவுஇற்றுஆனாலும், ஆழிஅம்கைப்
பேராயர்க்குஆளாம் பிறப்பு.
இந்த மண்ணுலகத்திலே யாராகப் பிறந்து எத்தகைய இழிவான தொழில்களைச் செய்தாலும் சரி, அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டிருக்கும் பேராயனான எம்பெருமானுக்கு அடிமையாகப் பிறந்திருக்கும் இந்தப் பிறப்பு, பரமபதத்துக்கு இணையான சிறப்பல்லவா! அப்படிப் பிறந்தவர்கள் ஊழ்வினையை எண்ணி அஞ்சுவார்களா? சுவர்க்கத்தை ஒரு பொருட்டாக எண்ணுவார்களா? (மாட்டார்கள்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.