அஃதே உய்யப்புகும் ஆறுஎன்று கண்ணன் கழல்கள்மேல்
கொய் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர்போய் உய்யற்பாலரே.
கொய்யக்கூடிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், ‘கண்ணனின் திருவடிகள்தான் நாம் உய்வதற்கான வழி’ என்றார். அப்பெருமானின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யும்விதமாக அழகிய, சிறப்பாகத் தொடுத்த ஆயிரம் பாடல்களைப் பாடினார் அவர்,
அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் குறைவின்றிக் கற்பவர்களுடைய ஆழ்ந்த துன்பங்கள் தீரும், அவர்கள் வாழ்வில் உய்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.