மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன்சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நல்கோவையே.
நம் கண்ணனை எண்ணி மெலிகிறவர்களுடைய நோயை அவனே தீர்த்துவைப்பான், அத்தகைய கண்ணனின் திருவடிகளைப் பற்றி, நிறைந்த புகழைக்கொண்ட, வளம் பெருகிய குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களை ஒலிச்சிறப்போடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள், புகழ் நிறைந்த வானவர்களோடு நல்லவிதமாகச் சேர்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.