நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7

எம்பெருமானின் திருக்காட்சி

செ.குளோரியான்


பாடல் 7

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை, மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்,
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே.

எம்பெருமானின் அழகைக் கண்டு, உண்டு மகிழ்ந்தேன், இனி நான் மேலுலகத்துக்குச் செல்லவில்லை என்று ஒரு குறை உண்டா? (இல்லை. எம்பெருமானின் திருக்காட்சி மேலுலகத்தைவிட உயர்ந்தது.) பெருமானுக்கு உயர்ந்த திருத்தொண்டுகளை நான் செய்து மகிழ்ந்தேன், அவற்றின் நிறைவில் சொல்லப்படுகிற ‘நம’ என்ற சொல்லைச் சொல்லித் தொழுதேன், வண்டுகள் மகிழ்ச்சியோடு சுற்றிவருகிற சோலைகளால் சூழப்பட்ட திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், நான் கண்டு களிக்கும்படி என் கண்களுக்குள் நின்றான், அங்கிருந்து விலகவே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT