நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 4

எதிர்நின்று வரவேற்றார்கள்

செ.குளோரியான்

பாடல் 4

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்,
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்,
அதிர் குரல் முரசங்கள் அலைகடல் முழக்கு ஒத்த,
மது விரி துழாய்முடி மாதவன் தமர்க்கே.

தேனோடு மலர்கிற திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்த மாதவனுடைய அடியவர்களைத் தேவர்கள் எதிர்நின்று வரவேற்றார்கள், அவர்கள் தங்குவதற்கான இடம் வகுத்தார்கள், பன்னிரண்டு சூரியர்களும் தங்களுடைய கைகளைக் காட்டியபடி அவர்களை அழைத்துச்சென்றார்கள், அதிர்கின்ற முரசுகள் அலைகடலின் முழக்கத்தைப்போல் ஒலியெழுப்பின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT