நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3

மாய அம்மான்

செ.குளோரியான்

பாடல் 3

என்னை முற்றும் உயிர் உண்டு, என் மாய ஆக்கை இதனுள் புக்கு,
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே?

எம்பெருமான் என்னுடைய உயிரை முழுவதுமாக உண்டான், மாயமாகிய இந்த உடலினுள் புகுந்தான், நான் என்பது முற்றிலும் தானே எனும்படி நின்றான், அத்தகைய அந்த மாய அம்மான் சேர்ந்திருக்கும் திருத்தலம், தென் திசையிலுள்ள சிறந்த திருமாலிருஞ்சோலை, அந்தத் திருமாலிருஞ்சோலை இருக்கும் திசையை நோக்கிக் கை கூப்புகிற நான், இதற்குமேலும் வேறு இடத்தைத் தேடிச் செல்வேனோ? எம்பெருமான் திருவருள் என்னவோ! நான் அறியேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT