முகப்பு
தினம் ஒரு தேவாரம்

77. அட்டுமின் இல்பலி - பாடல் 5

ஆடலும் பாடலும்

Updated On : 24 அக்டோபர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:25 PM

பாடல் 5:
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள்
                                                                                             தொழ
நண்ணிலயத்தோடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொண்டு நின்றான் திரிபுரம் மூன்று
                                                                                             எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும் உள கழல் சேவடியே

விளக்கம்:

நிலையம்=திருக்கோயில்; ஆடலும் பாடலும் பிரியாத நல்லோர் என்று சொல்வதன் மூலம், மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடும் பாங்கு இங்கே உரைக்கப்படுகின்றது. 

பொழிப்புரை:

தலையில் வெண்பிறை சூடி உலகத்தவர்கள் காண நிற்பவனும், விண்ணோர்கள் தொழுமாறு கூத்து புரிபவனும், இலயத்தோடு இணைந்த ஆடலும் பாடலும் பிரியாத நல்லூர் தலத்தில் உள்ள சிறப்பான திருக்கோயில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், திரிபுரம் மூன்றையும் எரித்தவன். வீரக்கழல்கள் அணிந்த அவனது திருப்பாதங்கள் எனது கண்களிலும் நெஞ்சினிலும் உள்ளன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.