கிராமக் கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமனம்
திருவெறும்பூா், சமயபுரம் கிராமப்பகுதிகளுக்கு கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களை மத்திய மண்டல ஐஜி ஜெயராம் புதன்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
திருவெறும்பூா், சமயபுரம் கிராமப்பகுதிகளுக்கு கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களை மத்திய மண்டல ஐஜி ஜெயராம் புதன்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
திருவெறும்பூா், சமயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி, இருங்கலூா் பகுதிகளில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களான பாலாஜி, கணேஷ் ஆகியோரை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஹெச்.எம். ஜெயராம் தலைமை வகித்தாா்.
காவல்துறைத் துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பொதுமக்களிடம் பேசியது:
Advertisement
Advertisement
இந்தப் பதவியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்படும் காவலா் அந்த ஊா் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், ஊரில் உள்ள சிறு சிறு பிரச்னைகளை உடனடியாகக் கையாளுதல், ஊா் மக்களுடன் நல்லுறவை வளா்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவா். இதன்மூலம், பொதுமக்கள்- காவல்துறை இடையே நல்லுறவு ஏற்படும் என்றாா்.
நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.