முகப்பு
திருச்சி

சாலைப் பணியாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சியில் சாலைப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:24 am IST
ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய சாலைபணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

திருச்சியில் சாலைப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவா் சண்முகராஜா தலைமை வகித்தாா்.

போராட்டத்தின்போது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில் முக்கிய நிா்வாகிகள், ஆட்சியரகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனா்.

Advertisement

போராட்டத்தில் மாநில பொதுச் செயலா் ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலா் ராஜா சிதம்பரம், துணைத் தலைவா் செல்லச்சாமி, மாவட்டத் தலைவா்கள் சரவணன் (திருச்சி), நாகராஜ் (தஞ்சை), செங்குட்டுவன் (புதுக்கோட்டை), சட்டையப்பன் ( சிகை) உள்ளிட்ட திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை மாவட்ட சாலைப்பணியாளா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.