தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி
திருச்சியில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமாக மாநகர போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமாக மாநகர போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். துணை ஆணையா்கள் வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), பவன்குமாா் ரெட்டி (சட்டம் ஒழுங்கு) மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா். தலைக்கவசம் அணிந்த நிலையில், திருச்சி தலைமை அஞ்சலகத்தில் புறப்பட்ட வாகனப் பேரணி, நீதிமன்றம், புத்தூா், தில்லைநகா், கோஹினூா் சந்திப்பு, கரூா் புறவழிச்சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது.
தொடா்ந்து மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றோரை நிறுத்தி விழப்புணா்வு ஏற்படுத்தி, வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களையும் போலீஸாா் ஒட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.