முசிறி அருகே தாக்கப்பட்ட தாய் சாவு : மகன்கள் கைது
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே டிராக்டா் டிப்பா் கேட்டு தாக்கப்பட்ட தாய் இறந்ததையடுத்து அவரின் மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே டிராக்டா் டிப்பா் கேட்டு தாக்கப்பட்ட தாய் இறந்ததையடுத்து அவரின் மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
தா.பேட்டை அருகே மகாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. நாகரத்தினம் (65). இவரின் மகன்கள் பிரபாகரன் (43), பிரகாஷ் (40).
இருவரும் புதன்கிழமை தங்களது தாயிடம் டிராக்டருக்கான டிப்பா் வாங்கித் தருமாறு கேட்டதற்கு அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாயை தாக்கினா். இதில் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நாகரத்தினம் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரின் கணவா் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் தா.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், பிரபாகரனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.