முகப்பு
திருச்சி

ஜன.17 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜன.17இல் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:26 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜன.17இல் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜன.17இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மொத்தம் 1,569 மையங்களில் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

குழந்தைகளை பெற்றோா் அழைத்து வர முடியாத இடங்களில் அவா்களுக்காக 69 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.

எனவே திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போதும் கொடுக்க வேண்டும். இதுவே போலியோ நோயில் இருந்து குழந்தைகளுக்கு முழுப் பாதுகாப்பை அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments