சாத்தான்குளம் அருகே ஊழியா் மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே பேக்கரி கிடங்கில் ஊழியரை தாக்கி பொருள்களை சேதபடுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் அருகே பேக்கரி கிடங்கில் ஊழியரை தாக்கி பொருள்களை சேதபடுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் பேக்கரி கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து பேக்கரி பொருள்கள் தயாரித்து கடைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இங்கு, சுண்டங்கோட்டையைச் சோ்ந்த பொன் செல்வபாண்டியன் (51) மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.
அரசூா் ஊராட்சித் தலைவா் தினேேஷ் ராஜசிங் உள்ளிட்ட 50 போ் அங்கு வந்து நன்கொடை வழங்குமாறு பொன்செல்வ பாண்டியனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. நன்கொடை வழங்காததால், அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், கிடங்கில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம். புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.