திருச்செந்தூா் கோயில் பெருமாளுக்கு வெள்ளி அங்கி காணிக்கை
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.
போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் கிருபாகரன். செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சுவாமி வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13, 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.
இதனை திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா்(பொ) கல்யாணி பெற்றுக்கொண்டாா். அப் போது உள்துறை கண்காணிப்பாளா்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.