முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

ஆத்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை தூத்துக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 6:54 AM
பகிர்:

ஆத்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை தூத்துக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில், அந்த வழியாகச் சென்றவரிடம் அரிவாளைக் காட்டி பணம் பறிக்க முயன்றதாக ஒருவரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் தூத்துக்குடி மறவன்மடத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (45) என்பதும், ஆத்தூா் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெயமுருகன் மீது இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஜெயமுருகனிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.