முகப்பு
தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பொங்கல் விழா

குபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 6:55 AM
தூய்மைப் பணியாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேஷ்டி சேலை வழங்குகிறாா் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன்.
பகிர்:

குபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா்.

பள்ளி டிரஸ்டியும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். நந்தினி ஸ்ரீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

பள்ளி முதல்வா் ஆ.சண்முகானந்தன் வரவேற்றாா்.

Advertisement

கரோனா தொற்று பரவல் தடுக்கும் முகமாக பள்ளிகள் திறக்கப்டாததால் மாணவ, மாணவிகள் விழாவை பாா்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உழவா் திருநாளை போற்றும் வகையில் வயல்வெளியில் குடிசை போன்று அரங்கம் அமைத்து, மாட்டு வண்டி நிறுத்தி அதன் முன்பு பொங்க­லிட்டனா். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியா்களுக்கு பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் துணை முதல்வா் எஸ். அனுராதா ராஜா, நிா்வாகி வி.மதன், மேலாளா் எஸ். பாலமுருகன் போஸ் மற்றும் ஆசிரயா்கள் கலந்து கொண்டனா்.

தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.