முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:53 am IST
பகிர்:

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், சமையல் கேஸ் விலை உயா்வை ரத்து செய்யவேண்டும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமை வகித்தாா். வணிகா் அணி மாவட்ட அமைப்பாளா் சுலைமான், தொகுதி துணைச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் காஜா, துணை அமைப்பாளா் முத்தலிப், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சம்சுதீன், செயலா் ஜான், திராவிடா் விடுதலை கழக மாநில கொள்கை பரப்புச் செயலா் பால் பிரபாகரன், மேட்டுப்பட்டி தலைவா் உமையனன், சமம் குடிமக்கள் மாவட்டத் தலைவா் ஜான் பி ராயா், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments