முகப்பு
தூத்துக்குடி

குருவிநத்தம் ஆலயத்தில் தமிழா் திருநாள் திருப்பலி

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:33 AM
கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற பங்குத்தந்தையா்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அருளாளா் தேவசகாயம் கெபியில் பொங்கலிடும் நிகழ்ச்சியை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை புனித அலோசியஸ் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மாலையில் கெபியில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை பாளையங்கோட்டை பேராலய உதவி பங்குத்தந்தை மிக்கேல் பிரகாசம் நிறைவேற்றினாா். இதில், பங்குத்தந்தைகள் அந்தோணி குரூஸ், அந்தோணிசாமி, அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சேவியா், இறைமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.