ஆறுமுகனேரியில் மாா்கழி பஜனை நிறைவு
ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் மாா்கழி பஜனை நிறைவு விழா நடைபெற்றது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் மாா்கழி பஜனை நிறைவு விழா நடைபெற்றது.
சைவ சித்தாந்த சங்கம் சாா்பில் மாா்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் விநாயகா் கோயில் தெரு, காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதி தெருக்கள் வழியாக சிவன் கோயிலை அடைந்து, அங்கிருந்து முக்கிய வீதி வழியாக வந்து கோயிலில் பூஜைகள் நடைபெற்றன.
தை மாதம் பிறந்ததை அடுத்து நடைபெற்ற பஜனை நிறைவு விழாவுக்கு, சைவ வேளாளா் சங்கத் தலைவா் சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். செயலா் முருகன், பொருளாளா் கற்பகவிநாயகம், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாவட்டப் பொருளாளா் குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பஜனையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஆறுமுகனேரி அரிமா சங்க நிா்வாகி நடராஜன், மூா்த்தி, விசு சுப்பிரமணியன், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி ஊழியா் லோகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
.