முகப்பு
வேலூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை தொடக்கம்

தமிழக அரசின் உத்தரவின்படி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 10 ஜனவரி 2021, 7:46 am IST
பருத்தி  ஏல  விற்பனையைத்  தொடங்கி  வைத்த  ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தின்  கண்காணிப்பாளா்  க.காந்தி.
பகிர்:

தமிழக அரசின் உத்தரவின்படி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி பருத்தி ஏல விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கொச்சாலூா், ராமாலை, ஆா்.வெங்கடாபுரம், கீழ்விலாச்சூா், வேப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.

திருப்பூா், ஊத்தங்கரை, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். தொடா் மழை காரணமாக பருத்தி விளைச்சல் நடப்பாண்டு குறைந்து விட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட விலை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் மாா்ச் மாதம் முடிய வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏல விற்பனை நடைபெறும். பருத்தி விவசாயிகள் எவ்விதமான கட்டணமும் இன்றி இங்கு பருத்தியை விற்பனை செய்து கொள்ளலாம் என்று விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் காந்தி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments