மும்பைக்கு மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மும்பைக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பிற்பகல் நேர வகுப்புகளுக்கு விடுமுறை...
மும்பை: மும்பைக்கு சனிக்கிழமை மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்ததைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பிற்பகல் நேர வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரஹன்மும்பை மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை காலை முதலே நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
பருவமழை தாமதமாகத் தொடங்கிய போதிலும், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மும்பையின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளின் தகவலின்படி, புறநகர் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன; இருப்பினும், ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
The Mumbai civic body on Saturday declared a holiday for the afternoon session in all schools and colleges across the metropolis after the India Meteorological Department ....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.