முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

எங்கெல்லாம் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்..

Updated On : 5 ஜூன் 2026, 2:02 pm IST
ஆரஞ்சு எச்சரிக்கை - file photo
பகிர்:

தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நீலகிரி, கோவையில் இன்று (ஜூன் 5) மிக கனமழை எச்சரிக்கையும், தென்காசி, நெல்லை தேனி திண்டுக்கல் திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

விருதுநகர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

நாளை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 7ல் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.