நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
எங்கெல்லாம் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்..
தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நீலகிரி, கோவையில் இன்று (ஜூன் 5) மிக கனமழை எச்சரிக்கையும், தென்காசி, நெல்லை தேனி திண்டுக்கல் திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
விருதுநகர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
நாளை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 7ல் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.